பனை அபிவிருத்திச் சபை (ப.அ.ச)
பனை அபிவிருத்திச் சபையானது 1971ம் ஆண்டின் 46ம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 1975ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 18ம் திகதி ஆவணி மாத 1978ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மேலதிக தோட்டப் பயிர்ச் செய்கை அமைச்சின் கீழ் பனைசார் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். 2010ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தது. அதன் பின்னர் 2015 ஜனவரி 08ம் திகதியிலிருந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்கீழ் மிகவும் சிறப்பாக தொழிற்பட்டு வருகின்றது.
பனை அபிவிருத்தி சபையின் பிரதான செயற்பாடுகளாக மாதிரிப் பண்ணைகளின் கைத்தொழிலை ஒழுங்கமைத்தல், நவீனமயமாக்கல் மற்றும் அபிவிருத்தி, கைவினைப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள், பல்வேறு வகையான பனை உற்பத்திகளை உருவாக்கல், பனை உற்பத்திகளை ஊக்குவித்தல், உணவு பொருள் உற்பத்திகள் மற்றும் பிற உற்பத்திகளை அபிவிருத்தி செய்து, பிரிவுகள் அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொள்வதுடன், கற்பகம் விற்பனை நிலையங்களை முறையாக பராமரித்தல்.
எமது தூரநோக்கு
வளங்களையும் சூழலையும் அழியாமல் அதே வேளையில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அர்த்தம் மிகுந்த பங்களிப்பை கொடுக்கும் பனைப் பிரிவை அபிவிருத்தி செய்வது.
எமது குறிக்கோள்
பனைக் கைத்தொழிலையும் பனை வளங்களையும் ஒழுங்குபடுத்தி அபிவிருத்தி செய்தலும் முன்னேற்றுதலும்.
சபையின் முன்னால் தலைவர்கள்

முதல் தலைவர்
அமரர் திரு. கே.சி நித்தியாநந்தா
(1970-1978)
பனையின் பயன்பாடுகள் ஒரே பார்வையில்
